முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்குள் நுழைய முயன்றவரை எதிர்வரும்ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வவாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த ஒருவரை பாதுகாப்பு பிரிவினர் நேற்று கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய நபரை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
