Friday, September 22, 2017

ரணிலை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயார் - தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா


நாட்டில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதை காணக்கூடியதாக இருப்பதாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே இதனை அவர் தெரிவித்தார்,

பொருளாதார, இனவாத, மதவாத பிரச்சினைகள் தலைதுாக்கியுள்ளது, களவு செய்தவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, வெளிநாடுகளுக்கு இலங்கை சோரம் போயுள்ளது இதுவெல்லாம் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் செயலாகும்.

இதற்கெல்லாம் காரணம் ரணில் எனும் தனி ஒருவர்தான் இவரை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் என்று குறிப்பிட்டார்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.